பல்லவி
கருண ஜூ(ட3வ)ம்மா 1வி(ன)ம்மா
ஆஸ்1ரித ஜன கல்ப வல்லீ 2மா தல்லீ
அனுபல்லவி
மரக(தா)ங்கி3 பஞ்ச ந(தே3)ஸு1 ராணி
மது4ர வாணி த4ர்ம ஸம்வர்த4னி (கருண)
சரணம்
சரணம் 1
ந(ரா)த4முலனு மஹா ராஜு(ல)னி பொக3டி3
3து3(ரா)ஸசே திரிகி3 வேஸாரி இலலோ
விராஜ முகி2 நீவு த3யதோ காபாடி3
பி3ரான வர(மீ)யவே கி3ரி ராஜ ஸுதா நீவு (கருண)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/ ஜூடு3/-அம்மா/ வினு/-அம்மா/
கருணை/ காட்டுவாய்/ அம்மா/ கேள்/ அம்மா/
ஆஸ்1ரித/ ஜன/ கல்ப/ வல்லீ/ மா/ தல்லீ/
நம்பும்/ மக்களின்/ கற்ப/ வல்லியே/ எமது/ தாயே/
அனுபல்லவி
மரகத/-அங்கி3/ பஞ்ச நத3/-ஈஸு1/ ராணி/
மரகத/ அங்கியே/ திருவையாறு/ இறைவனின்/ ராணியே/
மது4ர/ வாணி/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ (கருண)
இனிய/ குரலினளே/ அறம்/ வளர்த்த நாயகியே/
சரணம்
சரணம் 1
நர/-அத4முலனு/ மஹா/ ராஜுலு/-அனி/ பொக3டி3/
மனிதரில்/ இழிந்தோரை/ மகா/ ராஜர்கள்/ என/ புகழ்ந்து/
து3ராஸசே/ திரிகி3/ வேஸாரி/ இலலோ/
வீணாசையுடன்/ திரிந்து/ தளர்ந்தேன்/ உலகினில்/
விராஜ/ முகி2/ நீவு/ த3யதோ/ காபாடி3/
ஒளிரும்/ முகத்தினளே/ நீ/ தயையுடன்/ காப்பாற்றி/
பி3ரான/ வரமு/-ஈயவே/ கி3ரி/ ராஜ/ ஸுதா/ நீவு/ (கருண)
விரைவில்/ வரம்/ அருள்வாயம்மா/ மலை/ யரசன்/ மகளே/ நீ/ (கருணை)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வினம்மா ஆஸ்1ரித ஜன - வினம்மா ஸ்1ரித ஜன - வினவம்மா ஆஸ்1ரித ஜன. இம்மூன்றிலும் பொருள் வேறுபாடு பெரிதேதும் இல்லை.
2 - மா தல்லீ - மா தல்லீ மா தல்லீ.
3 - து3ராஸசே - து3ராஸ1சே : 'து3ராஸசே' என்பதே சரியெனக் கருதுகின்றேன்.
4 - குமாருடு3 க3தா3 நாகிபுடு3 அப4யமீயவே - குமாருடு3 க3தா3 நேனு இபுடு3 அப4யமீயவே : பிற்கூறியது சரியென்றால், 'குமாருடு3 க3தா3 நேனு' என்று சேர்த்து, 'மகன் அல்லவோ நான்' என்று பொருள் கொள்ளப்படும்.
Top
5 - மானவாதீத க3தா3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 'மதிக்கப்பெற்றவள் அன்றோ' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய பொருளுக்கு, 'மானவதி க3தா3' என்றிருக்க வேண்டும். கொடுத்துள்ள சொற்களை, 'மானவ அதீத க3தா3' என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு, 'மனிதர்களுக்கு அப்பாற்பட்டவள் அன்றோ' என்று பொருளாகும். அத்தகைய பொருள், பொருத்தமாகத் தோன்றவில்லை. எனவே, புத்தகங்களில் கொடுக்கப்பட்ட 'மதிக்கப்பெற்றவள் அன்றோ' என்ற பொருளே பொருத்தமாக உள்ளதாக நான் கருதுகின்றேன். எனவே, இங்கு, 'மானவதி க3தா3' என்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
6 - பதா3ம்பு3ஜமுனு நம்மி - பதா3ம்பு3ஜ நம்மி : பிற்கூறியது சரியல்ல.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
அனைத்து சரணங்களிலும், சொற்களின் அமைப்பினை நோக்குகையில், முழுமையாகப் பொருள் கொள்வது கடினமாக உள்ளது. (ச1 - 'து3ராஸசே திரிகி3 வேஸாரி' - வீணாசையினால் திரிந்து தளர்ந்து; ச2 - 'அபி4மானமு லேத3னி' - அன்பு இல்லையென; ச3 - 'ஸதா3 நுதி ஜேரி நீ பதா3ம்பு3ஜமுலனு' - எவ்வமயமும் போற்றி அடைந்து உனது திருவடித் தாமரைகளினை; ச4 - 'பதா3ம்பு3ஜமுனு நம்மி நின்னே ப4ஜிஞ்சி' - திருவடித் தாமரையினை நம்பி உன்னையே பஜித்து). ஆயினும், பொருள் நிறைவுறுவதற்காக, சில சொற்களை இடம் மாற்றியமைத்தும், சொற்கள் சிலவற்றைக் கூட்டியும் இடத்திற்குத் தகுந்த பொருள் கொள்ளப்பட்டது.
மரகதாங்கி - மரகத நிற உடலினள்
அறம் வளர்த்த நாயகி - தர்ம ஸம்வர்த்தனி எனப்படும் திருவையாறு அம்மை
Top